விளக்கம் அளித்த பும்ரா
மெல்போர்ன் டெஸ்ட் தோல்வியால் மனவேதனை அடைந்த அவர் இனிமேலும் அணிக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று கருதி தானாக விலகி விட்டார் என்று தகவலக்ள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், கடைசி டெஸ்ட்டில் ரோகித் சர்மா இடம்பெறாததது குறித்து பும்ரா விளக்கம் அளித்துள்ளார்.
5வது டெஸ்ட் போட்டியில் டாஸுக்கு பிறகு பேசிய பும்ரா, ''எங்கள் கேப்டன் ரோகித் சர்மா தனது தலைமை பண்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இது அணியில் ஒற்றுமை உள்ளது; சுயநலம் இல்லை என்பதை காட்டுகிறது. அணியின் நலனுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்'' என்றார்.
இந்நிலையில், 5வது டெஸ்ட்டில் பும்ரா தலைமையில் களம் கண்ட இந்திய அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் (10 ரன்), கே.எல்.ராகுல் (4), விராட் கோலி (17), சுப்மன் கில் (20) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு 'கேல் ரத்னா'; தமிழக வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு!