சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐயின் இந்த கொள்கைகள் குறித்து கேட்கப்பட்டது. ஆனால் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்திய வீரர்கள் தங்கள் மேனேஜர்களையும், உதவியாளர்களையும் உடன் அழைத்து செல்லவும் பிசிசிஐ தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடர் தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி: முழு அட்டவணை! போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?