1xBet என்ற சூதாட்ட செயலிக்கு விளம்பர செய்தது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
விசாரணை வளையத்தில் பல்வேறு பிரபலங்கள்
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. பிரபலங்கள் பெற்ற பணம் ஹவாலா மூலம் பெறப்பட்டதா அல்லது சட்டப்பூர்வ வங்கி சேனல்கள் மூலம் பெறப்பட்டதா என்பதை அமலாக்கத்துறை அறிய விரும்புகிறது.
1xBet உடனான அவர்களது ஒப்பந்தங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பகிருமாறும் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.