Asia Cup: அட! இந்தியாவும், பாகிஸ்தானும் பைனலில் மோத சான்ஸ் இருக்கா? எப்படி தெரியுமா?

Published : Sep 22, 2025, 06:49 PM IST

Asia Cup 2025: India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் 3வது முறையாக அதுவும் பைனலில் மோத வாய்ப்புள்ளது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Asia Cup 2025: India vs Pakistan

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குரூப் சுற்று மற்றும் சூப்பர் ஃபோர் சுற்றில் இரு அணிகளும் மோதின. இரண்டு முறையும் இந்தியாவே வெற்றி பெற்றது. குரூப் சுற்றில் மோதியபோது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. நேற்று சூப்பர் ஃபோர் சுற்றில் மோதியபோது 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

24
இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் மோதல்?

ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது. அது 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இருக்கலாம். சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியா தனது இறுதிப் போட்டி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

ஆனால் பாகிஸ்தானுக்கு நிலைமை அவ்வளவு எளிதல்ல. சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

புள்ளிப்பட்டியலில் டாப் எந்த அணி?

சூப்பர் ஃபோரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு போட்டியை முடித்துள்ள நிலையில், தலா இரண்டு புள்ளிகளுடன் இந்தியாவும் வங்கதேசமும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 

+0.689 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா முதலிடத்திலும், +0.121 நெட் ரன் ரேட்டுடன் வங்கதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற இலங்கை -0.121 நெட் ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்திலும், -0.689 நெட் ரன் ரேட்டுடன் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளன.

34
பாகிஸ்தான் நிலைமை சிக்கலாகும்

இலங்கைக்கு எதிராக நாளை பாகிஸ்தான் விளையாடும் போட்டி, ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதுமா என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். நாளை இலங்கையை வீழ்த்தினால், பாகிஸ்தான் தனது இறுதிப் போட்டி நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளலாம்.

 கடைசிப் போட்டியில் வங்கதேசத்தையும் வீழ்த்தினால் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கலாம். இலங்கையை வீழ்த்திய வங்கதேசத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் தோற்கடித்தால், வங்கதேசத்தின் இறுதிப் போட்டி வாய்ப்பு மங்கிவிடும்.

44
டாப் கியரில் இந்திய அணி

இந்தியாவிடம் தோற்றதால், நாளை இலங்கைக்கு எதிரான போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா சாவா போராட்டமாகும். முதல் போட்டியில் வங்கதேசத்திடம் எதிர்பாராத தோல்வியை சந்தித்த இலங்கைக்கும், நாளை பாகிஸ்தானை வீழ்த்தினால் மட்டுமே இறுதிப் போட்டி நம்பிக்கையை தக்கவைக்க முடியும் என்பதால், கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. 

புதன்கிழமை வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா, வெற்றி பெற்றால் இலங்கையுடனான கடைசி போட்டிக்கு முன்பே இறுதிப் போட்டியை உறுதி செய்யலாம்.

வங்கதேசத்துக்கும் வாய்ப்புள்ளது

இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேசமும் இறுதிப் போட்டி நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளலாம். இதனால் பாகிஸ்தானும் இலங்கையும் வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். இருப்பினும், மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளதால், நெட் ரன் ரேட் இறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 

ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories