நாங்கள் அந்த போட்டியில் 110 ரன்களை ஒட்டிய இலக்கை நோக்கி ஆடிக் கொண்டு இருந்தோம். மறுபுறம் வி்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்து கொண்டே இருந்தன. இதனால் அந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். நான் அனில் கும்ப்ளேவின் பந்தில் பந்தை வேகமாக அடிக்க முற்பட்டு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினேன்.
நான் ஓய்வு அறையில் நின்று கொண்டிருந்த நிலையில், அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை தோனி வேகமாக எட்டி உதைத்தார். அது உயர பறந்து கீழே விழுந்தது. அப்போது அவரது கண்களை பார்க்கக் கூட நாங்கள் பயந்தோம். ஆனால் தோனி அந்த செயலைத் தவிற ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவரின் கோபத்தை நாங்கள் உணர முடிந்தது. இது தான் அவரது பாணி என்றார்.