தனது சுயசரிதை குறித்த உரையாடலில் அந்த சம்பவம் குறித்து பேசிய வாசிம் அக்ரம், என் மனைவியின் சிகிச்சைக்காக லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது, விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கியது. எங்களிடம் இந்தியாவிற்கான விசா இல்லை. விசா இல்லாமல் சென்னையில் இறங்கிய எங்களை ஏர்போர்ட் அதிகாரிகளும் மக்களும் அடையாளம் கண்டுவிட்டார்கள். சென்னை ஏர்போர்ட்டில் இருந்த ஏர்போர்ட் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், கஸ்டம்ஸ் அதிகாரிகள் என அனைவருமே எனக்கு ஆறுதல் கூறி, என் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து எனது விசா பிரச்னையையும் தீர்த்துவைத்தனர். அந்த சம்பவத்தை எந்த காலத்திலும் மறக்கமாட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.