இந்நிலையில், போட்டிக்கு பின் சூர்யகுமாருடனான பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய விராட் கோலி, சூர்யா (சூர்யகுமார்) அடித்து ஆட தொடங்கியதும் டக் அவுட்டில்(dug out) ரோஹித் மற்றும் ராகுல் bhai(டிராவிட்) இருவருமே என்னிடம், சூர்யகுமார் நன்றாக அடிக்கிறார். எனவே நீங்கள்(கோலி) சிங்கிள் ரொடேட் செய்து பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசிவரை ஆடுங்கள் என்று கூறினர். அதனால் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தினேன். எனது அனுபவத்தை பயன்படுத்தி ஆடினேன். ஒருமுனையில் நான் நிலைத்து நிற்க சூர்யகுமார் அடித்து ஆடினார். சூர்யகுமார் ஆட்டமிழந்தபின் தான், கம்மின்ஸின் பந்தில் சிக்ஸர் அடித்து எனது ஃப்ளோவிற்கு மீண்டும் வந்தேன் என்றார் கோலி.