இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியவர். டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 2020ம் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் ஹோம் & அவே என்ற பழைய ஃபார்மட்டில் ஆடவுள்ளது. எனவே அடுத்த சீசன் போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதால், அடுத்த சீசனுடன் தோனி ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனில் தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். எனவே அடுத்த ஐபிஎல் சீசன் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இன்று ஓரியோ பிஸ்கட்டை லான்ச் செய்தார். இதுதான் அவர் சொன்ன உற்சாகமான செய்தியா..? தன் மீதான அன்பாலும் பற்றாலும் தன்னை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்யும் கோடிக்கணக்கான ரசிகர்களை பணத்திற்காக மிஸ் யூஸ் செய்வதை தவிர வேறு என்னவாக இதை புரிந்துகொள்ள முடியும்..? தனது ஃபாலோயர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோனி இட்ட பதிவிற்கு ஸ்பெஷலாக கவனிக்கப்பட்டிருப்பார்.