இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை(ஜனவரி 7) ராஜ்கோடில் நடக்கிறது. அந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
24
கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 2வது டி20 போட்டியில் ஹாட்ரிக் நோ பால் உட்பட மொத்தம் 5 நோ பால்களை வீசி ஆட்டத்தின் முடிவு இந்தியாவிற்கு பாதகமாக அமைய முக்கிய காரணங்களில் ஒருவராக அமைந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்ஷல் படேல் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.