207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 57 ரன்களுக்கே இஷான் கிஷன், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் சூர்யகுமாரும் அக்ஸர் படேலும் இணைந்து அபாரமாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 6வது விக்கெட்டுக்கு 42 பந்தில் 90 ரன்களை குவித்தனர். 51 ரன்னில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, 31 பந்தில் 65 ரன்களை குவித்து கடைசி வரை போராடிய அக்ஸர் படேல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 190 ரன்கள் அடித்த இந்திய அணி, கடுமையாக போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.