இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே அணியின் பவுலிங் சிறப்பாக இல்லை. குறிப்பாக கேப்டன் தோனிக்கு திருப்தியளிக்கவில்லை. அதற்கு காரணம், சிஎஸ்கே பவுலர்கள் வழங்கிய எக்ஸ்ட்ராஸ். லக்னோவிற்கு எதிரான போட்டியில் மட்டும் 12 வைடுகள் மற்றும் 3 நோ பால்கள் வீசப்பட்டன. அதனால் தான் போட்டி மிகவும் நெருக்கமாக சென்று 12 ரன்கள் என்ற குறைவான வித்தியாசத்தில் வெற்றியை பெற நேர்ந்தது. வைடு, நோ பால்களை தவிர்த்திருந்தால் பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம்.