#AUSvsIND இந்த 2 மாற்றத்தையும் செய்யலைனா இந்தியா மறுபடியும் தோற்பது உறுதி..! கவாஸ்கர் அதிரடி

First Published Dec 21, 2020, 2:59 PM IST

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் அணுக வேண்டிய முறை குறித்து முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக தொடக்க வீரர் பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலுமே ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் மொத்தமாகவே 4 ரன்கள் மட்டுமே அடித்தார்.
undefined
இந்திய அணி முதல் டெஸ்ட்டிலேயே தோல்வியை தழுவி, டெஸ்ட் தொடரை தோல்வியுடன் தொடங்கிய நிலையில், இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் மற்றும் எப்படி அணுக வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆலோசனை கூறிவருகின்றனர்.
undefined
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், மெல்போர்ன் டெஸ்ட்டில்(2வது டெஸ்ட்) இந்திய அணி 2 மாற்றங்கள் செய்தே தீர வேண்டும். பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு தொடக்க வீரராக கேஎல் ராகுலையும், நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை அணியில் சேர்த்து ஐந்து அல்லது ஆறாம் வரிசையில் இறக்க வேண்டும். முதல் டெஸ்ட் தோல்வியை பற்றி கவலைப்படாமல், 2வது டெஸ்ட்டை பாசிட்டிவாக அணுக வேண்டும். முதல் தோல்விக்கு பிறகும் சிறப்பாக கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி ஆடவேண்டும். அப்படி பாசிட்டிவாக அணுகவிலை என்றால், 4-0 என தோற்க நேரிடும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
undefined
click me!