#AUSvsIND நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. அவரு ஃபிட்டா இருந்தா நாளைக்கு ஃப்ளைட்டுலயே ஆஸி.,க்கு அனுப்புங்க

First Published Dec 20, 2020, 5:37 PM IST

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி காயத்தால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், இந்திய அணி பலவீனமடைந்துள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதற்கடுத்து நடக்கவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆடவில்லை. அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், இந்தியா திரும்புவதால், கடைசி 3 டெஸ்ட்டில் கோலி ஆடவில்லை. கோலி ஆடாததே இந்திய அணிக்கு பெரும் பாதிப்பு என்ற நிலையில், பிரைம் ஃபாஸ்ட் பவுலரான முகமது ஷமியும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
undefined
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 2வது இன்னிங்ஸில் ஷமி பேட்டிங் ஆடும்போது, கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் ஷமியின் வலது கையில் பலமாக அடிபட்டதையடுத்து, அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்றார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வலது(பந்துவீசும் கை) கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், அவரால் இந்த தொடரில் தொடர்ந்து விளையாட முடியாது. அதனால் டெஸ்ட் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
undefined
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ஷமியின் காயம் இந்திய அணிக்கு பெரிய பிரச்னை. எதிரணி வீரர்களுக்கு தனது பவுன்ஸர்கள் மற்றும் யார்க்கர்களின் மூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியவர் ஷமி. அவர் ஆடாதது இந்திய அணிக்கு பெரிய பிரச்னை. இஷாந்த் சர்மா ஃபிட்டாக இருக்கிறார் என்றால் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும். ஒருநாளைக்கு இஷாந்த் சர்மாவால் 20 ஓவர்கள் வீச முடிந்தால் கூட போதும். அணி நிர்வாகம் அவரை வைத்து சமாளித்துவிடும். அவர் அந்தளவிற்கு ஃபிட்டாக இருந்தால், நாளைக்கு விமானத்திலேயே அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினால் தான், சிட்னி டெஸ்ட்டுக்காவது அவரால் தயாராக முடியும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!