#AUSvsIND இந்திய அணியில் இவரை தூக்கிட்டு அவரை சேர்க்க இதுதான் சரியான டைம்..! சீனியர் வீரருக்கு ஆப்பு..?

First Published Dec 20, 2020, 3:50 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விக்கெட் கீப்பரை மாற்ற வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து, அடுத்தடுத்த போட்டிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
undefined
குறிப்பாக, பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. அதேபோல விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
undefined
இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், தரமான விக்கெட் கீப்பருக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக, இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் ரிதிமான் சஹா விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டார். வெளிநாடுகளில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதுதான் இந்திய அணி நிர்வாகத்தின் முந்தைய திட்டம். ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பியதால் தான் ஆஸி.,க்கு எதிராக சஹாவே எடுக்கப்பட்டார். ஆனால் சஹா முதல் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 13 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் ரிஷப் பண்ட்டோ, பிங்க் பந்தில் ஆடப்பட்ட பயிற்சி போட்டியில் அதிரடியாக ஆடி 73 பந்தில் சதமடித்தார்.
undefined
இந்நிலையில், ஆஸி.,க்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ரிதிமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள தீப்தாஸ் குப்தா, ரிதிமான் சஹா வசதியாக உணரவில்லை. எனவே இதுதான் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க சரியான நேரம் என்று குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
click me!