இன்றைய போட்டியில் பவர்பிளே முடிந்த சில நிமிடங்களில் மந்தனாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 11-வது ஓவரில் நோன்குலுலேகோ மிலாபாவின் இரண்டாவது பந்தில் அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வரலாறு படைத்த போதிலும், சொந்த மண்ணில் நடக்கும் நடப்பு உலகக் கோப்பையில் 29 வயதான மந்தனாவின் ஃபார்ம் இந்தியாவுக்கு கவலையளிப்பதாக உள்ளது. மூன்று போட்டிகளில், அவர் 18.00 என்ற சராசரியுடன் வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஆஸி.க்கு எதிராக அதிவேக சதம்
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஸ்மிருதி மந்தனா அசுரத்தனமான பார்மில் இருந்தார். அருண் ஜேட்லி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், மந்தனா 50 பந்துகளில் சதம் அடித்து, 50 ஓவர் வடிவத்தில் ஒரு இந்தியர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையை படைத்தார்.