ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் இருக்கிறார். வரும் 17ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்ட்ரெந்த் & கண்டிஷனிங் பயிற்சியில் உள்ளார். எனவே அவர் 2வது டெஸ்ட்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரது இடத்தில் இறங்கும் சூர்யகுமார் யாதவ், 2வது டெஸ்ட்டில் பொறுப்பாக பேட்டிங் ஆடவேண்டியது அவசியம்.