இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அவருக்கான இடத்திற்காக போட்டி போடுவது, சூர்யகுமார் யாதவுடன். சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய இந்தியாவின் 360 ஆவார். எனவே அவருடன் போட்டியிட்டு, இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், மிகச்சிறப்பாக ஆடியாக வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயரின் பலவீனம் அம்பலப்பட, அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக விளையாட, இந்திய அணியின் ஆடும் லெவனில் இடத்தை இழந்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.