முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி வெற்றியின் உச்சத்தை அடைந்தார். 3 விதமான ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்து புதிய சகாப்தம் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபிகளை வென்று கொடுத்த ஒரேயொரு கேப்டன் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி படைத்தார்.
2007 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் முக்கிய பங்கு வகித்தார். 2007 ஆம் ஆண்டு சச்சினுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், சச்சின் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றதோடு, தோனியின் பெயரை பரிந்துரை செய்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஐசிசி டிராபியையும் தோனி வென்று கொடுத்தார். 2009 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியானது டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.