கோலியின் ஜெர்சியுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்.. இணையத்தில் வைரல்..!

Published : Nov 01, 2025, 09:39 PM IST

காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். இந்தியா ஏ அணிக்காக விளையாடியபோது விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்ததால் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.  

PREV
15
திரும்ப வந்த பண்ட்

காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த், மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கினார். இந்தியா ஏ போட்டியில் அவர் விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

25
பிசிசிஐ என்ன சொல்கிறது?

தோனியின் 7, சச்சினின் 10 போல, கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வளிக்க ரசிகர்கள் கோரினர். ஆனால், பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.

35
18 எண் ஜெர்சி

கடந்த ஜூன் மாதம், முகேஷ் குமார் இந்தியா ஏ அணிக்காக 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தபோதும் சர்ச்சை எழுந்தது. தற்போது ரிஷப் பந்த் அதே ஜெர்சியை அணிந்ததால் மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது.

45
பிசிசிஐ மூத்த அதிகாரியிடமிருந்து விளக்கம்

இந்தியா ஏ போட்டிகளில் வீரர்கள் எந்த எண்ணையும் தேர்வு செய்யலாம் என பிசிசிஐ அதிகாரி விளக்கமளித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஜெர்சி எண் நிரந்தரம். பந்த் தனது 17 ஆம் நம்பரையே அணிவார்.

55
பந்த் கிரிக்கெட்டுக்கு திரும்பினார்

ஜெர்சி சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு மீண்டும் களமிறங்கியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அவரது வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories