IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியா அபார வெற்றி..! SKY செய்த தவறு! இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்!

Published : Oct 31, 2025, 05:47 PM IST

IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்டன் சூர்யகுமார் செய்த தவறுகள் என்ன? இந்தியா தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
IND vs AUS 2nd T20

மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் (5), சஞ்சு சாம்சன் (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1), திலக் வர்மா (0), அக்சர் படேல் (7) விரைவில் அவுட் ஆனார்கள்.

24
ஜோஸ் ஹேசில்வுட் மேஜிக் பவுலிங்

ஆனால் தனி ஆளாக போராடிய அபிஷேக் சர்மா 37 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன் எடுத்தார். ஹர்சித் ராணாவும் (33 பந்தில் 35 ரன்) சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பவர்பிளேயில் மேஜிக் பவுலிங் செய்த ஜோஸ் ஹேசில்வுட் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பார்லெட், எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

பவர்பிளேயில் கதற விட்ட ஆஸ்திரேலியா

பின்பு எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஹர்சித் ராணா பந்துகளை பவுண்டரியும், சிக்சருமாக விரட்டி சிதறித்தார். இதேபோல் பவர்பிளேயில் பும்ராவும் பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

34
ஹெட், மார்ஷ் அதிரடி

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடக்க ஜோடியை பிரித்தார். 15 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன் அடித்த டிராவிஸ் ஹெட் வருண் பந்தில் திலக் வர்மாவின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார். மறுமுனையில் கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் குல்தீப் யாதவ்வின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி அசத்தினார். 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் அடித்து அதே ஓவரில் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

பின்பு டிம் டேவிட் (1), ஜோஸ் இங்கிலீஷ் (20) அடுத்தடுத்து குல்தீ, வருண் பந்தில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா வெற்றியை நெருங்கிய வேளையில் பும்ரா மிட்ச்செல் ஓவன் (14), மேத்யூ ஷார்ட் (0) 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. புயல் வேக பந்துவீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார்.

44
இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்?

இந்த போட்டியில் இந்தியாவின் பவுலிங் நன்றாக இருந்தபோதும் பேட்டிங் படு மோசமாக இருந்தது. சூர்யகுமார் உள்ளிட்ட முன்னனி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே இந்தியாவின் தோல்விக்கு முதல் காரணமாகும். 

அத்துடன் கேப்டன் சூர்யகுமார் சஞ்சுசாம்சன் (5வதில் இருந்து 2வது), ஷிவம் துபே (ஹர்சித் ராணாவுக்கு பிறகு) ஆகியோரின் பேட்டிங் ஆர்டரை மாற்றி தவறு செய்ததும் தோல்விக்கு ஒரு காரணமாகும். இது மட்டுமின்றி 33 பந்தில் 35 ரன் எடுத்த ஹர்சித் ராணா நன்றாக விளையாடிய அபிஷேக் சர்மாவுக்கு அதிகம் ஸ்டிரைக் கொடுக்காததும் தோல்விக்கு ஒரு காரணமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories