ஒரு இடம் தான் இருக்கு.. இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கிடம் இடத்தை இழக்கும் ரிஷப் பண்ட்..?

First Published Aug 15, 2022, 4:35 PM IST

இந்திய டி20 அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிப்பது தனக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கும் இடையேயான போட்டி குறித்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.
 

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து நடக்கவுள்ள நிலையில், அந்த 2 கோப்பைகளையும் வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 
 

இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது

இதையும் படிங்க - ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் புதிய 3ம் வரிசை வீரர்..! தரமான சாய்ஸ்

தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக இந்திய அணியில் தனது இடத்தை பிடித்துவிட்டார். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாது தினேஷ் கார்த்திக்கே 7வது பேட்ஸ்மேனாக இறங்குகிறார் என்றால், இந்திய அணி 4 பவுலர்களுடன் மட்டுமே ஆடமுடியும். ஹர்திக் பாண்டியா 5வது பவுலராக இருப்பார். அது கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாமல் செய்துவிடும்.
 

எனவே தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம் இருக்கிறது என்பதே நிதர்சனம். ஆனால் இந்திய அணி நிர்வாகம் என்னை நினைக்கிறது என்று தெரியவில்லை.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை எடுத்தது ஆச்சரியம் தான்..! ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்நிலையில், தினேஷ் கார்த்திக்குடனான போட்டி குறித்து கேள்விக்கு பதிலளித்த ரிஷப்  பண்ட், நாங்கள் எங்களுக்குள் போட்டி என்று கருதவில்லை. இருவருமே தனித்தனியாக எங்களது 100% பங்களிப்பை அணிக்காக அளிக்கிறோம். மற்றவை எல்லாம் பயிற்சியாளர், கேப்டன், அணி நிர்வாகம் என்னை நினைக்கிறார்கள் என்பதை பொறுத்தது  என்று ரிஷப் பண்ட் கூறினார்.

click me!