அதன்விளைவாக, மீண்டும் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக தனக்கான இடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். அவரது கெரியரில் சிறந்த ஃபார்மில் இப்போது உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து மிரட்டினார்.