இதுகுறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், கடைசி 3 ஆண்டுகளாக முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகிய மூவரும் திட்டங்களை சரியாக செயல்படுத்தி பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரான நான், இருவருமே அவர்கள் மூவரின் திறமை மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஷாஹீன் அஃப்ரிடி தான் இந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்துபவர். அவர் இல்லையென்றாலும் கூட, இவர்கள் மூவரும் இந்தியாவிற்கு டஃப் கொடுப்பார்கள் என்று சக்லைன் முஷ்டாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.