முன்னாள் வீரர்கள், ரசிகர்களின் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இங்கிலாந்து தொடர் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதாவது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுக்கும் வரை அணிக்காக விளையாடுவேன் என்று கூறினீர்கள் உங்களுக்கென்று கட்டுப்பாடோ, கண்ணியமோ கிடையாதா? தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவீர்களா என்று கேட்டதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறியதால் சலசலப்பு ஏற்பட்டது.