ஆனால், மகளிர் இந்திய அணி ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்றார். மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்த 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 2 பிரிவுகளாக பிரிந்து விளையாடுகின்றன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். வரும் 20 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.