Asia Cup 2022: பாண்டியா பட்டைய கெளப்பிட்டாப்ள..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம்

First Published Aug 30, 2022, 5:25 PM IST

ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே அபாரமாக ஆடி அசத்திவிட்டார் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் 2 அணிகளுமே படுமட்டமாகத்தான் ஆடின..! அதில் இந்தியா ஜெயித்தது - அக்தர் கடும் தாக்கு

ஹர்திக் பாண்டியா முகமது ரிஸ்வான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய மூவரையும் வீழ்த்தினார். முகமது ரிஸ்வான் மற்றும் குஷ்தில் ஷா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.

பவுலிங்கில் அசத்திய ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் பட்டைய கிளப்பினார். ரோஹித் சர்மா (12), ராகுல்(0), ஆகியோர் சோபிக்காதபோதிலும், நல்ல பங்களிப்பு செய்த கோலி (35) மற்றும் ஜடேஜா(35) ஆட்டமிழந்துவிட்டபோதிலும், 17 பந்தில் 33 ரன்களை விளாசி, சிக்ஸருடன் போட்டியை முடித்து கொடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார் ஹர்திக் பாண்டியா.

இதையும் படிங்க - ஷுப்மன் கில் - சாரா அலி கான் துபாயில் டேட்டிங்! சாரா டெண்டுல்கர் என்ன ஆனார்? வைரல் வீடியோ

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து பாபர் அசாமிடம் கேள்வியெழுப்பிய நிருபர், ஹர்திக் பாண்டியா மாதிரியான வீரர் ஃபிட்டாக இருந்தால் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார். அது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பாபர் அசாம், பாண்டியா அபாரமாக பந்துவீசினார். பேட்டிங்கிலும் அசத்தினார். அவர் சிறந்த ஆல்ரவுண்டர். அவர் போட்டியை முடித்தவிதம் அபாரமாக இருந்தது என்று பாபர் அசாம் புகழாரம் சூட்டினார்.

click me!