இது தொடர்பாக ஐசிசி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கதேசம் கேட்கவில்லை. வங்கதேசம் இந்தியாவுக்கு விளையாட வரவில்லை என்றால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்படும் என ஐசிசி ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.
ஆனாலும் இந்தியா வர முடியாது என வங்கதேசம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு பதில் ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்த்தது.
வங்கதேசத்துக்கு பதில் ஸ்காட்லாந்து
இந்த நிலையில், வங்கதேச அணி இந்தியா வருவதை பாகிஸ்தான் தடுத்தது என்று பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய ராஜீவ் சுக்லா, ''வங்கதேச அணி இந்தியாவில் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
அந்த அணிக்கான முழு பாதுகாப்பையும் உறுதி செய்தோம். ஆனால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதால், கடைசி நேரத்தில் முழு அட்டவணையையும் மாற்றுவது மிகவும் கடினம். இதனால்தான் ஸ்காட்லாந்து கொண்டுவரப்பட்டது'' என்றார்.