டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் மற்றும் 4 ஸ்டாண்ட்பை வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
ஸ்டாண்ட்பை வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
இதையும் படிங்க - நீ நல்ல பேட்ஸ்மேன் தான்.. ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு நீ சரிப்பட்டு வரமாட்ட..! தூக்கி எறியப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்
ஆனால் ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை முறையே ஹர்ஷல் படேல் மற்றும் தீபக் ஹூடாவிற்கு பதிலாக எடுத்திருக்கலாம். நானாக இருந்தால் அப்படித்தான் எடுத்திருப்பேன் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.