டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.
அடுத்துவரும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களில் தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் 11-12 வீரர்களை மட்டுமே வைத்து வலுவான அணி காம்பினேஷனை முயற்சி செய்து அந்த அணியின் மீது நம்பிக்கை வைத்து டி20 உலக கோப்பைக்கான காம்பினேஷனை உறுதி செய்யவேண்டும் என்பதே பல முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது.
அதேபோல சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி ஆடுவது குறித்த விவாதமும் நடந்துவரும் நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஆர்பி சிங், டி20 உலக கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் வலுவான காம்பினேஷனுடன் ஆடி நிறைய மாற்றங்களை செய்யாமல் டி20 உலக கோப்பைக்கான காம்பினேஷனை உறுதி செய்யவேண்டும். நல்ல வேகம் மற்றும் பவுன்ஸை தனது பவுலிங்கில் பெற்று, அதையே தனது பலமாகவும் பெற்றிருக்கும் ஷமி கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவேண்டும். நான் குல்தீப் யாதவையும் எடுப்பேன். ஆனால் கேஎல் ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.