அதாவது லுங்கி என்கிடி அணிந்திருந்த கைப்பட்டை (மஞ்சள், சிறிது வெள்ளை நிறம்) பந்தில் நிறத்தை போன்று இருப்பதால் தன்னால் சரியாக பார்க்க முடியவில்லை. இதனால் கவனச்சிதறல் ஏற்படுவதாக முகமது நபி தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கள நடுவர்கள் உடனே இதை ஆய்வு செய்து அந்த கைப்பட்டை என்கிடி அணியும் மஞ்சள் நிறம் கொண்டது தான் என்றும் இதனால் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறி முகமது நபி கோரிக்கையை நிராகரித்தனர். ஆனாலும் நபி என்கிடி மற்றும் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்கரமிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
முதன் முறையாக இரண்டு சூப்பர் ஓவர்
இந்த நிலையில் தான் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதால் முகமது நபிக்கு 15% அபராதமும், ஒரு தண்டனை புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி சர்ச்சையை ஏற்படுத்திய இந்த போட்டியில் 2 சூப்பர் ஓவர் நடந்தது.
2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்தது. அதாவது இரு அணிகளும் 187 ரன்கள் எடுத்து போட்டி சமனில் முடிந்த பிறகு நடந்த முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 17 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவும் 17 ரன் எடுத்ததால் இது டை ஆனது.