2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஒரு ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை நன்றாக தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியிருந்த நிலையில், நல்ல ஸ்கோர் அடித்துவிட்டு கடைசி இன்னிங்ஸில் இந்தியாவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் ஒரே செசனில் 9 விக்கெட்டுகளை இழந்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி கொட்டிக்கொண்டனர். ஸ்பின்னை எதிர்கொள்ள ஸ்வீப் ஷாட் சிறந்த ஆயுதம் என்றாலும், அதை அளவுக்கு மீறி பயன்படுத்தி மளமளவென ஆஸி., வீரர்கள் ஆட்டமிழந்தனர்.