இந்நிலையில், பாபர் அசாம் குறித்து பேசியுள்ள மஹேலா ஜெயவர்தனே, பாபர் அசாம் 3 விதமான ஃபார்மட்டிலும் அருமையாக ஆடிவருகிறார். அவர் 3 ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடுவார். அவர் கிஃப்ட்டாக கிடைத்த பிளேயர். எல்லாவிதமான கண்டிஷன்களிலும் அபாரமாக ஆடுகிறார். டெக்னிக், டைமிங், நிதானம் என அனைத்தையுமே ஒருசேர பெற்று, பேட்டிங்கில் அசத்துகிறார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டுக்கும் என்ன தேவை என்பதை, எப்படி ஆடவேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப திறம்பட தன்னை தகவமைத்து தெளிவாக செயல்படுகிறார். கேப்டன்சியிலும் ஜொலித்து பேட்டிங்கிலும் ஜொலிப்பது எளிய விஷயம் அல்ல. அதை பாபர் செய்கிறார் என ஜெயவர்தனே புகழாரம் சூட்டினார்.