இந்நிலையில், இந்திய அணியின் ஓபனிங் பேட்டிங் குறித்து பேசியுள்ள இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே, இந்தியா அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளித்து தொடர்ச்சியாக பரிசோதித்துவருகிறது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இந்திய இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு. ரிஷப் பண்ட்டே கூட ஓபனிங்கில் இறங்கலாம். அவர் உள்நாட்டு போட்டிகளில் பெரிதாக ஓபனிங்கில் ஆடியதில்லை என்றாலும், அவருக்கு அந்த திறமை இருக்கிறது என்று ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.