ஒருநாள் உலக கோப்பைக்கான எனது ஃபாஸ்ட் பவுலிங் தேர்வை கேட்டால், என்னை பொறுத்தமட்டில் 4 ஃபாஸ்ட் பவுலர்கள் போதுமானது. பும்ரா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகிய நால்வர் தான் எனது தேர்வு. நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் யாரை தேர்வு செய்வேன் என்பதைத்தான் கூறியுள்ளேன். நான் ஒரு ரசிகனாக கூறவில்லை. தீபக் ஹூடாவைக்கூட அணியில் எடுப்பேன். இவர்கள் எல்லாம் போட்டிகளை ஜெயித்து கொடுப்பார்கள். நமக்கு போட்டியில் ஜெயிப்பதுதானே முக்கியம். அப்படியென்றால், யூசுஃப் பதான் மாதிரியான வீரர்கள் தேவை. யூசுஃப் பதான் தனி ஒருவனாக போட்டிகளை ஜெயித்து கொடுத்திருக்கிறார். அவர் மாதிரியான வீரர் தேவை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.