சின்னசுவாமி மைதானத்தில் பிட்ச்சைத் தொட்ட கே.எல். ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டிருந்து ஓய்வா? சச்சின் வழியா?

Published : Oct 22, 2024, 08:23 AM ISTUpdated : Oct 22, 2024, 08:48 AM IST

KL Rahul Retirement: பெங்களூரு டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல் அடிபட்டு வருகிறது. பிட்ச்சைத் தொட்டு வணங்கியது தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

PREV
110
சின்னசுவாமி மைதானத்தில் பிட்ச்சைத் தொட்ட கே.எல். ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டிருந்து ஓய்வா? சச்சின் வழியா?
KL Rahul Touching Pitch

KL Rahul Test Cricket Retirement: புனே டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்படுவார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, பெங்களூரு போட்டிக்குப் பிறகு கே.எல். ராகுல் பிட்ச்சைத் தொட்டு வணங்கியது, ரசிகர்கள் மத்தியில் அவர் விடைபெறத் தயாராகிவிட்டாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

210
KL Rahul Touch the Pitch at M Chinnaswamy Stadium

நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, கே.எல். ராகுல் தனது சொந்த மைதான பிட்ச்சைத் தொட்டு வணங்கியது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த செய்கையின் பின்னணியில் விடைபெறும் செய்தி இருக்கிறதா? என்ற அச்சம் ரசிகர்களைப் பிடித்தாட்டுகிறது.

310
KL Rahul Rest From Pune Test

புனே டெஸ்ட் போட்டியில் இருந்து ராகுல் நீக்கப்படுவார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இந்தக் குறிப்பு ஏற்கனவே கிடைத்ததால், பெங்களூரு டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு கே.எல். ராகுல் தனது சொந்த மைதான பிட்ச்சைத் தொட்டு வணங்கியதாகக் கூறப்படுகிறது.

410
KL Rahul Test Cricket

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல். ராகுல் டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்கள் எடுத்தது. ஆனால் கே.எல். ராகுல் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது. தோல்விக்குப் பிறகு கே.எல். ராகுல் சின்னஸ்வாமி பிட்ச்சைத் தொட்டு வணங்கிய வீடியோ வைரலானது. 

510
KL Rahul Test Cricket

கேப்டன் ரோகித் சர்மா உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சைத் தொட்டு வணங்கியுள்ளனர். இவ்வாறு கே.எல். ராகுலும் பிட்ச்சைத் தொட்டு வணங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் புனே டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்படுவார் என்ற பேச்சுக்கள் எழுந்தபோது, அவர் பிட்ச்சைத் தொட்டு வணங்கியது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைபெறும் அறிகுறியா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

610
KL Rahul M Chinnaswamy Stadium

இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதும், இது ராகுலின் கடைசி டெஸ்ட் போட்டியா என்ற கேள்வியை பல ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விடைபெற்றார். அப்போது சச்சின் பிட்ச்சைத் தொட்டு வணங்கினார். 

710
KL Rahul Last Test Cricket

இந்தக் கிளாஸ் பேட்ஸ்மேன் சமீபத்தில் சந்தித்த தோல்விகள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. இதையடுத்து ராகுலின் செயல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தோல்வி, இந்திய அணியின் பேட்டிங் பிரிவில் சில மாற்றங்களுக்கு வழிவகுக்கும். புனே டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என்ற பேச்சுக்களுக்கு மத்தியில், விடைபெறும் பேச்சுக்களும் எழுந்துள்ளன.

810
KL Rahul Test Cricket

மேலும், திடீரென்று தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக அவர் ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணியில் இடம் பெற்று 3ஆவது வரிசையில் களமிறங்கி 152 ரன்கள் குவித்தது தான். பவுலிங்கிலும் 3 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

910
KL Rahul Retirement?

மேலும், மோசமான ஃபார்ம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய ராகுலுக்கு 2ஆவது போட்டியில் வாய்ப்பு மறுக்கப்படுமா அல்லது அவர் ஓய்வு அறிவிப்பாரா என்பது புரியாத புதிராக இருந்தாலும் வாஷிக்கு 2ஆவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1010
Rishabh Pant, KL Rahul

ரிஷப் பண்ட் விளையாடுவது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு 2ஆவது இன்னிங்ஸ் விளையாடிய பண்ட் அதன் பிறகு விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories