ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று வலுவான அணியாக வளம் வரும் நிலையில் கடந்த 2024 தொடரில் அதிரடியாக கேப்டன் பொறுப்பு ரோகித்திடம் இருந்து பறித்து ஹர்திக் பாண்டியா வசம் வழங்கப்பட்டது. இது அந்த அணியில் ரோகித்துக்கு அடுத்ததாக கருதப்பட்ட சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.