சச்சின் டெண்டுல்கர் - விராட் கோலி ஒப்பீடு தொடர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து பேசிய கபில் தேவ், ஒவ்வொரு தலைமுறையிலும் கிரிக்கெட் வீரர்கள் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கள் காலத்தில் சுனில் கவாஸ்கர், அடுத்த தலைமுறையில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் சிறந்த விளங்கினார்கள். இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அடுத்த தலைமுறையில் இன்னும் சிறந்த வீரர்கள் வருவார்கள். அவர்கள் ரோஹித், கோலியைவிட பயங்கரமாக ஆடுவார்கள் என்று கபில் தேவ் தெரிவித்தார்.