ஆனால் மறுமுனையில் இஷான் கிஷன் அதிரடியில் வெளுத்துக் கட்டினார். அப்ரார் அகமது, ஷதாப் கான் ஸ்பின் பவுலிங்கை சிக்சருமா, பவுண்டரியுமாக பறக்க விட்டார். அவருடன் சேர்ந்த திலக் வர்மா நிதானத்தை கடைபிடித்தார்.
இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதம் கடந்தார். எட்டாவது ஓவரில் 80 ரன்களைக் கடந்த இந்திய அணிக்கு, சயிம் அயூப் வீசிய ஒன்பதாவது ஓவரில் இரண்டாவது அடி விழுந்தது. அயூப்பிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்த கிஷன், அடுத்த பந்திலேயே போல்டாகி வெளியேறினார். இஷான் கிஷன் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் விளாசினார்.
பாண்ட்யா டக் அவுட்
கிஷன் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் ஸ்கோரிங் வேகம் வெகுவாகக் குறைந்தது. திலக் வர்மாவும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் இணைந்து 12-வது ஓவரில் இந்தியாவை 100 ரன்களைக் கடக்க வைத்தனர். பதினைந்தாவது ஓவரில் திலக் வர்மா சயிம் அயூப் பந்தில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பான்ட்யா அயூப் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.