இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை

First Published Jan 2, 2023, 5:42 PM IST

இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்குவது குறித்து எச்சரித்துள்ளார் இர்ஃபான் பதான்.
 

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி அடுத்தடுத்து 2 பெரிய டி20 தொடர்களில் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது. இந்திய அணியின் தோல்வி, டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி அணுகுமுறையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.

டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்களின் இருப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோலவே, அதன்பின்னர் டி20 கிரிக்கெட்டில் ரோஹித்தும் கோலியும் பெரிதாக ஆடுவதில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. 

2023 ஒருநாள் உலக கோப்பைக்கு பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்த 20 வீரர்கள் இவர்கள் தான்..! நீங்க கிளம்புங்க தவான்

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் டி20 அணியின் கேப்டன்சியை அவர் இப்போதே கிட்டத்தட்ட நிரந்தரமாக ஏற்றுவிட்டார். ஏனெனில் ரோஹித் பெரும்பாலும் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்துவகையிலும் அபாரமான பங்களிப்பை அணிக்கு வழங்கும் சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லில் கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி அறிமுக சீசனிலேயே அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். 
 

ஐபிஎல்லில் கேப்டன்சி திறனை நிரூபித்ததால் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றி பெற்றுவருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக அவரது கேப்டன்சியில் டி20 தொடரை வென்ற நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்படவுள்ளார். 

இனிமேல் ஐபிஎல்லில் ஆடிட்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் ஈசியா வந்துர முடியாது..! கடிவாளம் போட்ட பிசிசிஐ

ஹர்திக் பாண்டியா டி20 அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக  பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் சரி, இந்திய அணியையும் சரி, ஒரு கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார். அவர் களத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவரது கேப்டன்சியில் கம்யூனிகேஷனும் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரை முழுநேர கேப்டனாக நியமிப்பதென்றால், அவரது ஃபிட்னெஸை இந்திய அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு முதுகில் பிரச்னை உள்ளது. எனவே அவரை கேப்டனாக நியமித்தால், அனைத்து போட்டிகளிலும் ஆடவேண்டும். அதற்கு அவரது ஃபிட்னெஸ் ஒத்துழைக்க வேண்டும். அவரது ஃபிட்னெஸில் அணி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.
 

click me!