IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!

Published : May 08, 2026, 08:53 PM IST

IPL 2026: BCCI Issues Strict Code of Conduct: ஐபிஎல் தொடரின் ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பிசிசிஐ 8 பக்கங்கள் கொண்ட புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
13
ஐபிஎல் 2026 வீரர்களுக்கு பிசிசிஐ செக்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், சில வீரர்கள் செய்த செயல் பிசிசிஐக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. அதாவது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் புகைத்ததற்காக, அவரது போட்டி சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஏப்ரல் 10 அன்று பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தர், டக்-அவுட் அருகே மொபைல் போன் பயன்படுத்தியதற்காக அவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் இ சிகரெட் பிடித்ததாக சர்ச்சை எழுந்தது.

23
நெறிமுறைகள் வெளியீடு

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 8 பக்கங்கள் கொண்ட புதிய நெறிமுறைகளை (SOP) வெளியிட்டுள்ளது. வீரர்களின் அனுமதிக்கப்படாத நபர்கள் வீரர்களின் ஹோட்டல் அறைகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் யாரையும் தங்கள் தனிப்பட்ட அறைக்கு அழைக்க முடியாது. யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் ஹோட்டலின் பொதுவான வரவேற்பு அறையில் (Lobby) மட்டுமே சந்திக்க வேண்டும். இதற்கு மேலாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

வீரர்களோ அல்லது பயிற்சியாளர்களோ தனிப்பட்ட காரணங்களுக்காக ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால், பாதுகாப்பு அதிகாரியிடம் (SLO) முறையான அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் இ-சிகரெட் மற்றும் வேப் (Vape) பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே, டக்அவுட், டிரெஸ்ஸிங் ரூம், ஹோட்டல் மற்றும் பயிற்சி மைதானங்களில் புகைபிடிக்கவோ, வேப் பயன்படுத்தவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் போது அணி உரிமையாளர்கள் டக்அவுட்டில் இருக்கும் வீரர்களுடன் பேசுவதற்கோ அல்லது அவர்களைக் கட்டிப்பிடித்து உற்சாகப்படுத்துவதற்கோ அனுமதி இல்லை என்றும் பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

33
பிசிசிஐ துணைத் தலைவர் சொல்வது என்ன?

இது தொடர்பாக பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "பிசிசிஐ சில புதிய விதிகளை கொண்டு வருகிறது. வீரர்களை யார் சந்திக்கலாம் என்பதில் இனி கட்டுப்பாடு இருக்கும். ஹோட்டல்களிலோ, டீம் பஸ்களிலோ அங்கீகரிக்கப்படாத நபர்கள் வீரர்களை சந்திக்க முடியாது. ஐபிஎல் தொடரின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை" என்று குறிப்பிட்டார்.

சுக்லாவின் இந்த கருத்து, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்யாவின் அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் வீரர்கள், அணி அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சம்பந்தப்பட்ட பல "ஒழுங்கீனங்கள் மற்றும் முறைகேடுகள்" கண்டறியப்பட்டதால், அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று சைக்யா ஒரு நாள் முன்பு கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories