விமானத்தில் சிகரெட் அல்லது இ-சிகரெட் பிடிப்பது ஒரு சாதாரண விஷயமல்ல. இது சட்டப்படி குற்றம். இதனால் விமானத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம். இந்த விவகாரம் தீவிரமானால், சாஹலின் பெயர் 'நோ ஃப்ளை லிஸ்ட்' (No Fly List) எனப்படும் தடைப் பட்டியலில் சேர்க்கப்படலாம். அப்படி நடந்தால், அவர் குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்படலாம்.
ரியான் பராக் விஷயத்தில் என்ன நடந்தது?
சமீபத்தில்கூட, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் வேப்பிங் செய்தபோது பிடிபட்டார். அதற்காக பிசிசிஐ, அவரது போட்டி சம்பளத்தில் 25% அபராதமாக விதித்தது. இப்போது ரசிகர்கள், "டிரெஸ்ஸிங் ரூமில் செய்ததற்கே அபராதம் என்றால், உயர் பாதுகாப்புள்ள விமானத்தில் செய்த சாஹலுக்கு இதைவிட பெரிய தண்டனை கிடைக்குமா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.