ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஷுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் ஆட, 2வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும் நன்றாக பேட்டிங் ஆடினார். ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் 98 பந்தில் 98 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில்நின்றபோதும், அவரால் சதத்தை எட்டமுடியவில்லை. இதையடுத்து 36 ஓவரில் 225 ரன்கள் அடித்தது.