இப்போதைக்கு, இந்திய கிரிக்கெட் அணி எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்து இல்லை. அது ரோஹித், கோலி, பும்ரா என எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி.. அவர்களில் ஒருவர் அல்லது அவர்கள் யாருமே இல்லாமலேயே கூட வெற்றி பெறுமளவிற்கு திறமையான இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பளித்து வலுவான பென்ச் பலத்துடன் உள்ளது இந்திய அணி.