தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் சூப்பர் 8 சுற்று போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவின் சமீபத்திய ஃபீல்டிங் கவலைகள் குறித்து பேசிய மோர்னே மோர்கல், அணி களத்தில் தனது செயல்பாட்டை மேம்படுத்த கூடுதல் முயற்சி எடுத்து வருவதாக கூறினார். குறிப்பாக, இரண்டு ரன்களைத் தடுக்கவும், பவுண்டரிகளைத் தடுக்கவும் கோணங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கேட்ச் பிடிப்பது முக்கியம்
"நாங்கள் கடுமையாக உழைக்கும் ஒரு விஷயம் எங்கள் ஃபீல்டிங். கேட்ச்களின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம், இரண்டு ரன்களைத் தடுக்கவும், பவுண்டரிகளைத் தடுக்கவும் கோணங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆனால், தொடரின் இந்த முக்கிய கட்டத்தில் கேட்ச் பிடிப்பது நிச்சயமாக ஒரு பெரிய பங்களிப்பை வழங்கும்" என்று மோர்னே மோர்கல் கூறினார்.