இந்திய அணி வீரரும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி வீரருமான ராகுல் சாஹர் தனது மனைவி இஷானி ஜோஹரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் சாஹர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நான் மிக இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையில் நுழைந்தேன். அப்போது என்னைப் பற்றியோ, நான் உருவாக்க விரும்பிய வாழ்க்கையைப் பற்றியோ எனக்கு முழுமையான புரிதல் இருக்கவில்லை. அதன் விளைவாக நான் எதிர்பார்க்காத பல பாடங்களை வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டேன்.
அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது
கடந்த 15 மாதங்களாக நீதிமன்ற அறைகளில் பொறுமையையும், மீண்டு வரும் திறனையும், உண்மையின் மூலம் கிடைக்கும் வலிமையையும் கற்றுக்கொண்டேன். இன்று, என் வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. முறையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, பெரும் விலைகொடுத்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.