அபிஷேக் சர்மாவின் ஷாட் வரம்பிற்கு, அவர் களத்தில் சிறிது நேரம் செலவிட வேண்டும். தனது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க முயற்சிக்கக் கூடாது. பெரிய ஷாட்கள் வந்தால் சரி. ஆனால், அவர் வலுக்கட்டாயமாக குறுக்குவாட்டில் பெரிய ஷாட்களை ஆடக்கூடாது. ஒரு சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்க வேண்டும். நான்கு டாட் பால்கள் கூட ஒரு பொருட்டல்ல. அவற்றை பின்னர் ஈடுசெய்ய முடியும்.
புத்திசாலித்தனம் அவசியம்
ஆரம்பத்தில் அவர் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் நிலைபெற்ற பிறகு, தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். சிங்கிள் ரொட்டேட் செய்யாமல் இருந்தால் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது கடினம். ஆகவே முதலில், ரன் கணக்கைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பேட்டரும் அந்த முதல் ரன்னை விரும்புகிறார்கள். அதை அவர் பெற்றுவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்'' என்று தெரிவித்துள்ளார்.