T20 WC: ஆஸ்திரேலியா மட்டுமல்ல; இலங்கையையும் கதற விட்ட ஜிம்பாப்வே.. அடுத்து இந்தியாவா?

Published : Feb 19, 2026, 08:07 PM IST

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணி இலங்கையை அசால்ட்டாக வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா சிக்சர் மழை பொழிந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். 

PREV
13
இலங்கையை வீழ்த்திய ஜிம்பாப்வே

டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்த ஜிம்பாப்வே இப்போது இலங்கையை அவர்களின் சொந்த மண்ணிலேயே சாய்த்துள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

பதும் நிசங்கா சூப்பர் பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசியிருந்த பதும் நிசங்கா 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். மேலும் பவன் ரத்நாயக்கே (25 பந்துகளில் 44) குசல் பெரேரா (14 பந்துகளில் 22), குசல் மெண்டிஸ் (20 பந்துகளில் 14) ஆகியோர் கணிசமான பங்களிப்பு செய்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, பிராட் எவன்ஸ், கிரேம் க்ரீமர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 எடுத்து அபார வெற்றி பெற்றது.

23
ஆல்ரவுண்டராக ஜொலித்த சிக்கந்தர் ராசா

ஜிம்பாப்வே அணி வீரர் பிரையன் பென்னட் 48 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா 26 பந்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார். லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே (3 போட்டிகளில் வெற்றி, 1 போட்டி மழையால் ரத்து) தோல்வியே சந்திக்காமல் மாஸ் காட்டியுள்ளது.

33
சூப்பர் 8 சுற்றில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

இந்த போட்டிக்கு பிறகு பேசிய சிக்கந்தர் ராசா, ''நாங்கள் டாஸ் தோற்றபோது நாம் உண்மையாகவே சிறப்பாக விளையாடுகிறோம் என்றால், டாஸ் ஒரு பொருட்டே இல்லை என்று வீரர்களிடம் தெரிவித்தேன். பிங்கர்-ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் பந்து திரும்பவில்லை. ஆகையால் பேட்டிங்கின் போது அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம் என்று முடிவு செய்தோம். 

ஒவ்வொரு சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் பயிற்சி எடுத்துள்ளோம். சரியான நேரத்தில் சரியான வீரர்களைக் களமிறக்க எங்களிடம் தகுதியான நபர்கள் உள்ளனர். தங்கள் பொறுப்புகளில் அவர்கள் சரியாக செயல்படுகின்றனர். சூபப்ர் 8 சுற்றில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்'' என்று தெரிவித்தார். ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றில் வரும் 26ம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories