பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் அவர்களின் ஆட்டம் சிறந்த திறமையையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.
தொடர் முழுவதும் அணி மிகச்சிறந்த குழு மனப்பான்மையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியது. நமத்பு வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, எதிர்கால சாம்பியன்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவும் வாழ்த்து
இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''நமது அணி உலகக்கோப்பையை வென்று இந்தியாவின் பெருமையை விண்ணுக்கு உயர்த்தியிருப்பது, நாட்டிற்கு ஒரு மகுடம் சூட்டும் தருணம். உங்கள் அற்புதமான கிரிக்கெட் திறமைகள் மில்லியன் கணக்கான பெண்களுக்கு உத்வேகத்தின் பாதையை வகுத்தன. அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.