இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் முடித்து கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரிஷப் பண்ட்டை இறக்கலாமா என்றுதான் யோசித்தோம். ஆனால் டேனியல் சாம்ஸ் ஆஃப் கட்டர்களை வீசுவார். எனவே தினேஷ் கார்த்திக்கை இறக்கலாம் என்று தீர்மானித்து அவரை இறக்கினோம். அவர் வழக்கம்போல அந்த ரோலை செவ்வனே செய்தார் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.