சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்தவர் ஜடேஜா. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளின் விளைவாக சீசனின் இடையே தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ஜடேஜாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அந்த சீசனில் அதன்பின்னர் அவர் ஆடவில்லை.
இதையடுத்து சமீபத்தில் சிஎஸ்கே அணியை சமூக வலைதளத்தில் அன்ஃபோலா செய்தார். அதனால் அடுத்த சீசனில் ஜடேஜா வேறு அணிக்கு ஆடலாம் என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த சீசனுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் ஜடேஜாவை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ததால், ஜடேஜா இன்னும் 2 சீசன்களுக்கு சிஎஸ்கே அணியின் ஒப்புதல் இல்லாமல் அந்த அணியிலிருந்து விலகமுடியாது.
ஜடேஜாவை விட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஜடேஜா அதையும் மீறி வேறு அணிக்கு செல்ல முயல்வது ஐபிஎல்லில் அவருக்கு தடை விதிக்க வழிவகுக்கும். அதையும் மீறி அவர் சிஎஸ்கேவிற்கு ஆட விரும்பவில்லை என்றால், ஏதாவது காரணம் கூறி ஆடாமல் இருக்கலாம். அப்படி ஆடவில்லை என்றால், அவருக்கு ஊதியம் கிடைக்காது. எனவே ஜடேஜா இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஆடினால் சிஎஸ்கேவிற்காக ஆடவேண்டும். வேறு அணிக்காக ஆடமுடியாது.